• May 02 2024

இலங்கையை 24ஆம் திகதி வரை உலுக்கவுள்ள கோர மழை! வான் கதவுகள் திறப்பு..! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Dec 17th 2023, 10:35 am
image

Advertisement

தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலையானது எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள்  காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்தம் ஒன்று எதிர்வரும் 24ஆம் திகதி அளவில் உருவாகி அதன் மூலமும் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகஅந்த அறிக்கை கூறுகின்றது.

இவ்வாறு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல்   முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

மன்னார் யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற  பாலியாறு   பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது. 

இதன் காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் 

மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கி வருகின்றனர்.


இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், கரைச்சி - கண்டாவளை பகுதிகளிலேயே பாதிப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால்  வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 31 கிராம சேவகர் பிரிவுகளில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த  4340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெள்ளம் காரணமாக இதுவரை 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இங்கினிமிட்டிய, ராஜாங்கனை மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின்  வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், 

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாகவும் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, 

மூன்று நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் வான் கதவுகள  திறக்கப்பட்டுள்ளதாக 

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், தப்போவ நீர்த்தேக்கத்தில் 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் 

6 கதவுகள் 5 அடி உயரத்திலும், 12 வான் கதவுகள் தலா 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன. 


மறுபுறம்  காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன் ஆகிய மூன்று நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய பட்டு உள்ளது.

இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இன்று காலை 8 மணிக்கு பின்னர் மத்திய மலைநாட்டில் சற்று மழை ஓய்ந்து உள்ளது.சற்று சீரான கால நிலை ஏற்பட்டுள்ளது


இதேவேளை நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (17) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை 24ஆம் திகதி வரை உலுக்கவுள்ள கோர மழை வான் கதவுகள் திறப்பு. மக்களுக்கு அவசர எச்சரிக்கை தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலையானது எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள்  காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்தம் ஒன்று எதிர்வரும் 24ஆம் திகதி அளவில் உருவாகி அதன் மூலமும் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகஅந்த அறிக்கை கூறுகின்றது.இவ்வாறு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல்   முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மன்னார் யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற  பாலியாறு   பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது. இதன் காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கி வருகின்றனர்.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், கரைச்சி - கண்டாவளை பகுதிகளிலேயே பாதிப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால்  வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 31 கிராம சேவகர் பிரிவுகளில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த  4340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் வெள்ளம் காரணமாக இதுவரை 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.இங்கினிமிட்டிய, ராஜாங்கனை மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின்  வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாகவும் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, மூன்று நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் வான் கதவுகள  திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.இதன் அடிப்படையில், தப்போவ நீர்த்தேக்கத்தில் 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் 6 கதவுகள் 5 அடி உயரத்திலும், 12 வான் கதவுகள் தலா 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன. மறுபுறம்  காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன் ஆகிய மூன்று நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய பட்டு உள்ளது.இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும் இன்று காலை 8 மணிக்கு பின்னர் மத்திய மலைநாட்டில் சற்று மழை ஓய்ந்து உள்ளது.சற்று சீரான கால நிலை ஏற்பட்டுள்ளதுஇதேவேளை நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (17) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.இதன்படி, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement