• Sep 17 2024

மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மரத்தில் ஏறி போராடிய கணவன்; வவுனியா பொலிஸ் நிலையம் முன் பதற்றம்

Chithra / Sep 3rd 2024, 3:30 pm
image

Advertisement

தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால்  பரபரப்பு நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் இன்று (03.09) காலை இடம்பெற்றது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் அவருடன் சேர்த்து வைக்குமாறு கூறியே இவ்வாறு மரத்தில் ஏறி போராடியிருந்தார்.

நீண்ட நேரமாக அவர் மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. 

பின்னர் பொலிசார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றிருந்தார். 


மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மரத்தில் ஏறி போராடிய கணவன்; வவுனியா பொலிஸ் நிலையம் முன் பதற்றம் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால்  பரபரப்பு நிலை ஏற்பட்டது.குறித்த சம்பவம் இன்று (03.09) காலை இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளதாகவும் அவருடன் சேர்த்து வைக்குமாறு கூறியே இவ்வாறு மரத்தில் ஏறி போராடியிருந்தார்.நீண்ட நேரமாக அவர் மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் பொலிசார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement