தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை 09 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
13 வயது ஆன நிலையில் தனது மகளை விட்டுச் சென்ற தாய் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனால் தந்தையுடன் வாழ்ந்து வந்த சிறுமியை அவர் 2013 ஆண்டு நடுப்பகுதியில் இருந்து 2013 நிறைவடையும் வரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளார்.
இது தொடர்பில் சிறுமி, தனது அப்பம்மாவிடம் தெரிவித்ததை அடுத்து சிலகாலம் அவர் வந்து சிறுமியுடன் தங்கியிருந்துள்ளார்.அதன் பின்னர் தந்தையின் துன்புறுத்தல் நின்றுபோனது.
மேலும் திருமணம் செய்த அவர் கணவருடன் ஏற்பட்ட முண்பாட்டை அடுத்து தந்தை பாலியல் உறவு செய்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பில் கணவனும், மனைவியும் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 49 வயதான தந்தை ஒன்பது வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணவன் மனைவி முரண்பாடு-தந்தை கைது samugammedia தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய தந்தை 09 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,13 வயது ஆன நிலையில் தனது மகளை விட்டுச் சென்ற தாய் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.இதனால் தந்தையுடன் வாழ்ந்து வந்த சிறுமியை அவர் 2013 ஆண்டு நடுப்பகுதியில் இருந்து 2013 நிறைவடையும் வரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளார்.இது தொடர்பில் சிறுமி, தனது அப்பம்மாவிடம் தெரிவித்ததை அடுத்து சிலகாலம் அவர் வந்து சிறுமியுடன் தங்கியிருந்துள்ளார்.அதன் பின்னர் தந்தையின் துன்புறுத்தல் நின்றுபோனது.மேலும் திருமணம் செய்த அவர் கணவருடன் ஏற்பட்ட முண்பாட்டை அடுத்து தந்தை பாலியல் உறவு செய்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இது தொடர்பில் கணவனும், மனைவியும் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 49 வயதான தந்தை ஒன்பது வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.