• May 19 2024

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனின் பிறப்புறுப்பில் வெட்டு; உடலில் சிகரெட்டால் சூடு! சைக்கோ மனைவியால் பரபரப்பு

Chithra / May 7th 2024, 4:29 pm
image

Advertisement

 

உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை கட்டிப்போட்டு கொடுமை செய்த பெண்  கைது செய்யப்பட்டுள்ளார்.

உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் பிறப்புறுப்பில் கத்தியால் அறுத்தும் கொடுமை செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மெஹரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

சமூக வலைதளம் மூலம் பழகிய நபருடன் நெருக்கமாக பழக தொடங்கி இருக்கிறார் மெஹர். அது ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. 

இதனை அறிந்து கொண்ட கணவன் அந்த பெண்ணை கண்டித்து இருக்கிறார். ஆனாலும் அதனை கேட்காத மெஹர் ஜஹான், தொடர்ந்து அந்த இளைஞருடனான கள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை கைமீறி செல்ல, பெண்ணின் வீட்டில் கணவன் புகார் செய்திருக்கிறார்.  அப்படி இருந்தும் மெஹர் ஜஹான் கேட்கவில்லை. 

இது தொடர்பாக பலமுறை இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் இரவு தூங்கி எழுந்த பின் தன் உடலில் காயமாகவும், மிகவும் களைப்பாகவும் இருப்பதை உணர்ந்த கணவன், தன்னை தனது மனைவி ஏதோ செய்கிறார் என உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டின் படுக்கை அறையில் கேமரா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பாலில் போதை மருந்தை கலந்து கொடுத்து, கணவரை மயக்கமடைய செய்த மெஹர் ஜஹான் அவரது கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக தாக்கி இருக்கிறார். 

மேலும் ஒரு சைக்கோவை போல சிகரெட் புகைத்துக் கொண்டு அவரது மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். கொடூரத்தின் உச்சமாக அவரது பிறப்புறுப்பை கத்தியால் கீரி கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை காவல்துறையிடம் கணவன் ஒப்படைக்க, சைக்கோ தனமாக நடந்து கொண்ட மனைவியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மெஹர் ஜஹானின் கள்ளக்காதலனை தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவ மெஹர் ஜஹான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனின் பிறப்புறுப்பில் வெட்டு; உடலில் சிகரெட்டால் சூடு சைக்கோ மனைவியால் பரபரப்பு  உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை கட்டிப்போட்டு கொடுமை செய்த பெண்  கைது செய்யப்பட்டுள்ளார்.உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் பிறப்புறுப்பில் கத்தியால் அறுத்தும் கொடுமை செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மெஹரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.சமூக வலைதளம் மூலம் பழகிய நபருடன் நெருக்கமாக பழக தொடங்கி இருக்கிறார் மெஹர். அது ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட கணவன் அந்த பெண்ணை கண்டித்து இருக்கிறார். ஆனாலும் அதனை கேட்காத மெஹர் ஜஹான், தொடர்ந்து அந்த இளைஞருடனான கள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை கைமீறி செல்ல, பெண்ணின் வீட்டில் கணவன் புகார் செய்திருக்கிறார்.  அப்படி இருந்தும் மெஹர் ஜஹான் கேட்கவில்லை. இது தொடர்பாக பலமுறை இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இரவு தூங்கி எழுந்த பின் தன் உடலில் காயமாகவும், மிகவும் களைப்பாகவும் இருப்பதை உணர்ந்த கணவன், தன்னை தனது மனைவி ஏதோ செய்கிறார் என உணர்ந்திருக்கிறார்.இதனையடுத்து மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டின் படுக்கை அறையில் கேமரா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்.அந்த வீடியோவில் பாலில் போதை மருந்தை கலந்து கொடுத்து, கணவரை மயக்கமடைய செய்த மெஹர் ஜஹான் அவரது கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக தாக்கி இருக்கிறார். மேலும் ஒரு சைக்கோவை போல சிகரெட் புகைத்துக் கொண்டு அவரது மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். கொடூரத்தின் உச்சமாக அவரது பிறப்புறுப்பை கத்தியால் கீரி கொடுமைப்படுத்தி இருக்கிறார்.இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை காவல்துறையிடம் கணவன் ஒப்படைக்க, சைக்கோ தனமாக நடந்து கொண்ட மனைவியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மெஹர் ஜஹானின் கள்ளக்காதலனை தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவ மெஹர் ஜஹான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement