• May 20 2024

மகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததால் அடித்தேன்..! கல்வியங்காட்டு கொலை சம்பவத்தில் கைதான பெண் வாக்குமூலம்..!samugammedia

Sharmi / Aug 15th 2023, 10:20 am
image

Advertisement

யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில்  நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.

இந்நிலையில், எனது மகளுக்கு பாலியல்   சீண்டல் செய்ததால் ஆட்டோ சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறுமியின் தாயார்  பொலிசில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி ஒருவரை வழமையாக ஆட்டோவில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். இதனைப் பயன்ப டுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந் நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




மகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததால் அடித்தேன். கல்வியங்காட்டு கொலை சம்பவத்தில் கைதான பெண் வாக்குமூலம்.samugammedia யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில்  நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.இந்நிலையில், எனது மகளுக்கு பாலியல்   சீண்டல் செய்ததால் ஆட்டோ சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறுமியின் தாயார்  பொலிசில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி ஒருவரை வழமையாக ஆட்டோவில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். இதனைப் பயன்ப டுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.இந் நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement