• May 18 2024

நானும் வீதியில் கொல்லப்படலாம்..! சபையில் ரொஷான் வெளியிட்ட பரபரப்புத் தகவல் samugammedia

Chithra / Dec 4th 2023, 2:49 pm
image

Advertisement

 

பிக் பாக்கெட் அல்லது மோசடி இன்றி 69 இலட்ச மக்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்றவர்களை போன்று தானும் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம் என ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனியார் யூடியூப் சேனலில் கடந்த வெள்ளிக்கிழமை (01) ஒளிபரப்பான நேர்காணலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை கூட பெறாமல் அனைத்தையும் விளையாட்டு நிதியில் வரவு வைத்து விளையாட்டிற்காக தன்னை அர்பணித்ததற்காக செயற்குழுவும், சட்டமன்றமும் வெட்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என  ரொஷான் ரணசிங்க, தெரிவித்துள்ளார்.

தமக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு மத்தியஸ்தம் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் பற்றி பேசுவதால் தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இன்றைய தினத்திற்குள் நேரம் வழங்குவதாக தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு உரையாற்ற ஆளும் தரப்பில் நேரம் ஒதுக்கவில்லையாயின், எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து நேரத்தை ஒதுக்குவதற்கு தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, தமக்கு ஒதுக்கப்பட்ட பத்து நிமிடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

நானும் வீதியில் கொல்லப்படலாம். சபையில் ரொஷான் வெளியிட்ட பரபரப்புத் தகவல் samugammedia  பிக் பாக்கெட் அல்லது மோசடி இன்றி 69 இலட்ச மக்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்றவர்களை போன்று தானும் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம் என ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் யூடியூப் சேனலில் கடந்த வெள்ளிக்கிழமை (01) ஒளிபரப்பான நேர்காணலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.தான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை கூட பெறாமல் அனைத்தையும் விளையாட்டு நிதியில் வரவு வைத்து விளையாட்டிற்காக தன்னை அர்பணித்ததற்காக செயற்குழுவும், சட்டமன்றமும் வெட்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என  ரொஷான் ரணசிங்க, தெரிவித்துள்ளார்.தமக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு மத்தியஸ்தம் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் பற்றி பேசுவதால் தமக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இன்றைய தினத்திற்குள் நேரம் வழங்குவதாக தெரிவித்தார்.இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு உரையாற்ற ஆளும் தரப்பில் நேரம் ஒதுக்கவில்லையாயின், எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து நேரத்தை ஒதுக்குவதற்கு தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இதேவேளை, தமக்கு ஒதுக்கப்பட்ட பத்து நிமிடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement