• Jun 19 2025

விமானியை நான் வணங்குகின்றேன் - எவ்வளவோ முயன்றார்! ஏர் இந்தியா விமான விபத்தை நேரில் பார்த்தவரின் வார்த்தை !

shanuja / Jun 19th 2025, 11:53 am
image

விமானியை நான் வணங்குகின்றேன், அவர் பயணிகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றிருக்கிறார் எனத் தெரிந்தது என்று ஏர் இந்தியா விமான விபத்தை  நேரில் பார்த்தவர் ஊடகங்களிடம்  தெரிவித்துள்ளார். 


குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே  பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. 


விபத்தில் விமானத்தில்   பயணித்த 242 பயணிகளில்  ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும்  உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்தியாவை மட்டுமன்றி உலகத்தையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் நிகழ்ந்த காட்சிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து அனைவரையும் மனமுடைய வைத்துள்ளது. அதற்கமையவே விமான விபத்தை நேரில் பார்த்தவர் தன்னை நிலைகுலைய வைத்த அந்த ஒரு கணத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.  


அதில் “விமானியை நான் வணங்குகின்றேன். ஏனென்றால் விமானத்தின் சக்கரம் இங்கிருந்த வேப்பமரத்தில் உரசியது.  மெகானி நகர் பகுதியில் விமானம் கீழே இறங்கியது. அங்கிருந்த பேருந்து நிலையத்தில் விமானம் விழுந்திருக்கும். ஆனால் விமானி விமானத்தை மேல்நோக்கி திருப்பினார். அவர் ஒரு திறந்த வெளியில் விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால் வேப்பமரங்களும் கட்டடங்களும் அதற்குத் தடையாக இருந்தன. மரத்தில் மோதிய விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் விடுதியின் கட்டடத்தின் மீது விழுந்தது. 


அப்படியென்றால் விமானம் விழுவதற்கு முன் ஒருமுறை கீழே இறங்கியாதா? என ஊடகங்கள் அவரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த நபர், 

ஆம் மெகானிநகர் பேருந்து நிலையம் அருகே விமானம் கீழே இறங்கியது. விமானியை வணங்குகிறேன்.  விமானி எவ்வளவோ முயன்றார்.  அவர் விமானத்தை மேல்நோக்கி திருப்பினார். ஆனால் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடம் அருகே இருந்த வேப்ப மரங்களின் மீது உரசியது. முதலில் விமானம் மரத்தில் தான் உரசியது.  அதன் பிறகு தான் விமானம் வெடித்தது. - என மனமுடைந்து தெரிவித்தார். 


ஏர் இந்தியா விமான விபத்து மட்டுமன்றி விபத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு காட்சிகளும் வெளியாகி ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியமை குறிப்பிடத்தக்கது.

விமானியை நான் வணங்குகின்றேன் - எவ்வளவோ முயன்றார் ஏர் இந்தியா விமான விபத்தை நேரில் பார்த்தவரின் வார்த்தை விமானியை நான் வணங்குகின்றேன், அவர் பயணிகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றிருக்கிறார் எனத் தெரிந்தது என்று ஏர் இந்தியா விமான விபத்தை  நேரில் பார்த்தவர் ஊடகங்களிடம்  தெரிவித்துள்ளார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே  பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. விபத்தில் விமானத்தில்   பயணித்த 242 பயணிகளில்  ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும்  உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியாவை மட்டுமன்றி உலகத்தையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் நிகழ்ந்த காட்சிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து அனைவரையும் மனமுடைய வைத்துள்ளது. அதற்கமையவே விமான விபத்தை நேரில் பார்த்தவர் தன்னை நிலைகுலைய வைத்த அந்த ஒரு கணத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.  அதில் “விமானியை நான் வணங்குகின்றேன். ஏனென்றால் விமானத்தின் சக்கரம் இங்கிருந்த வேப்பமரத்தில் உரசியது.  மெகானி நகர் பகுதியில் விமானம் கீழே இறங்கியது. அங்கிருந்த பேருந்து நிலையத்தில் விமானம் விழுந்திருக்கும். ஆனால் விமானி விமானத்தை மேல்நோக்கி திருப்பினார். அவர் ஒரு திறந்த வெளியில் விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால் வேப்பமரங்களும் கட்டடங்களும் அதற்குத் தடையாக இருந்தன. மரத்தில் மோதிய விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் விடுதியின் கட்டடத்தின் மீது விழுந்தது. அப்படியென்றால் விமானம் விழுவதற்கு முன் ஒருமுறை கீழே இறங்கியாதா என ஊடகங்கள் அவரிடம் வினவினர். அதற்குப் பதிலளித்த நபர், ஆம் மெகானிநகர் பேருந்து நிலையம் அருகே விமானம் கீழே இறங்கியது. விமானியை வணங்குகிறேன்.  விமானி எவ்வளவோ முயன்றார்.  அவர் விமானத்தை மேல்நோக்கி திருப்பினார். ஆனால் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடம் அருகே இருந்த வேப்ப மரங்களின் மீது உரசியது. முதலில் விமானம் மரத்தில் தான் உரசியது.  அதன் பிறகு தான் விமானம் வெடித்தது. - என மனமுடைந்து தெரிவித்தார். ஏர் இந்தியா விமான விபத்து மட்டுமன்றி விபத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு காட்சிகளும் வெளியாகி ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement