இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று(27) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 11 இந்திய மீனவர்களையும் அத்துமீறி எல்லைக்குள் மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி: 11 இந்திய மீனவர்கள் கைது. இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று(27) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 11 இந்திய மீனவர்களையும் அத்துமீறி எல்லைக்குள் மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.