• May 21 2024

இணைய வழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள்..! பொலிஸார் அதிர்ச்சித் தகவல்!

Chithra / Dec 20th 2023, 1:22 pm
image

Advertisement

 

2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

2022ஆம் ஆண்டில், இணையவழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் தொடர்பில் 146,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றது.

இதனை தடுப்பதற்காக பராமரிக்கப்படும் சர்வதேச தரவு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நபரொருவர் சமூக ஊடகங்களில் அல்லது இணைய தளத்தில் சிறுவர்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளியை பதிவிடுதல், பகிர்தல் அல்லது பார்வையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவாராயின் அது குறித்த தகவல் விடயத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்பட்டு, குறித்த தரவு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும்

பின்னர் குறித்த தரவு அமைப்பினால், அவ்வாறான தகவல் அடங்கிய விபரங்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பப்படும்.

இந்த தரவு அமைப்பின் ஊடாக இலங்கைக்கும் இது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இணைய வழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள். பொலிஸார் அதிர்ச்சித் தகவல்  2023ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டில், இணையவழி ஊடாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பங்கள் தொடர்பில் 146,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றது.இதனை தடுப்பதற்காக பராமரிக்கப்படும் சர்வதேச தரவு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.நபரொருவர் சமூக ஊடகங்களில் அல்லது இணைய தளத்தில் சிறுவர்களின் நிர்வாணப் படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளியை பதிவிடுதல், பகிர்தல் அல்லது பார்வையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவாராயின் அது குறித்த தகவல் விடயத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்பட்டு, குறித்த தரவு அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படும்பின்னர் குறித்த தரவு அமைப்பினால், அவ்வாறான தகவல் அடங்கிய விபரங்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பப்படும்.இந்த தரவு அமைப்பின் ஊடாக இலங்கைக்கும் இது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement