நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சலை காவும் பக்டீரியா, நீர் அல்லது விலங்குகளின் சிறுநீரால் மண் மாசுபடும்போது, தோல் வெடிப்புக்கள் அல்லது வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாக தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரையிலும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் இந்த நோய் தொற்று பொதுவாக அதிகரிக்கும் என்று துசானி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது என்றும், நோயைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். எலிக்காய்ச்சலை காவும் பக்டீரியா, நீர் அல்லது விலங்குகளின் சிறுநீரால் மண் மாசுபடும்போது, தோல் வெடிப்புக்கள் அல்லது வேறு வழிகளில் மனித உடலுக்குள் நுழைவதாக தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரையிலும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் இந்த நோய் தொற்று பொதுவாக அதிகரிக்கும் என்று துசானி குறிப்பிட்டுள்ளார்.எனவே, அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது என்றும், நோயைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.