• May 17 2024

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்! samugammedia

Tamil nila / Oct 15th 2023, 6:30 pm
image

Advertisement

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன் போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன், அனைவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.




நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் samugammedia இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன், அனைவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement