• Sep 29 2024

அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அறிவிப்யை விடுக்கத் தயாராகும் மைத்திரி?

Chithra / Sep 29th 2024, 12:25 pm
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அறிவிப்பொன்றை விடுக்கத் தயாராகி வருவதாக  சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது நல்லாட்சி காலப்பகுதியில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த அறிவிப்பு எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடலாம் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டு “ கட்சியை ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” என தெரிவித்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

பல குழுவினர் கட்சியை ஒன்றிணைத்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி கூறுகின்றது.

 

அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அறிவிப்யை விடுக்கத் தயாராகும் மைத்திரி  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அறிவிப்பொன்றை விடுக்கத் தயாராகி வருவதாக  சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தனது நல்லாட்சி காலப்பகுதியில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.இந்த அறிவிப்பு எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடலாம் எனவும் கூறப்படுகின்றது.இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டு “ கட்சியை ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” என தெரிவித்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.பல குழுவினர் கட்சியை ஒன்றிணைத்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி கூறுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement