காதலி உயிரிழந்துள்ளதால் பிணத்திற்கு பொட்டு வைத்து திருமணம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சன்னி.
அதே பகுதியில் வாடகைக்கு வீடு பார்க்க சென்றபோது பிரியங்கா மாதேசியா என்ற இளம் பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார்
இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இது பற்றி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் செய்யவிருந்த நிலையில் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பிரியங்கா மாதேசியா தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் அவருடைய உடலை சவப்பெட்டியில் வைத்திருந்தனர்.
காதலி தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்த சன்னி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பிரியங்கா மாதேசியாவின் உடலை பார்த்து கதறி அழுது துடித்தார்.
மேலும் அவளை தனது மனைவியாக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து உள்ளூர் பூசாரி வரவழைக்கப்பட்டார். அவர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதினார். அப்போது சன்னிஇ பிரியங்கா மாதேசியாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை போட்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து திருமண சடங்குகளை செய்தார்.
தொடர்ந்து காதலியின் பிணத்தின் அருகிலேயே அமர்ந்து கதறி அழுதார்.
இந்த காட்சிகள் மனதை உருக்குவதாக இருந்தது.
இப்படியும் காதலா- பிணத்தை திருமணம் செய்த நெகிழ்ச்சிச் சம்பவம் காதலி உயிரிழந்துள்ளதால் பிணத்திற்கு பொட்டு வைத்து திருமணம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாலின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சன்னி. அதே பகுதியில் வாடகைக்கு வீடு பார்க்க சென்றபோது பிரியங்கா மாதேசியா என்ற இளம் பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இது பற்றி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் செய்யவிருந்த நிலையில் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பிரியங்கா மாதேசியா தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் அவருடைய உடலை சவப்பெட்டியில் வைத்திருந்தனர்.காதலி தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்த சன்னி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பிரியங்கா மாதேசியாவின் உடலை பார்த்து கதறி அழுது துடித்தார். மேலும் அவளை தனது மனைவியாக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உள்ளூர் பூசாரி வரவழைக்கப்பட்டார். அவர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதினார். அப்போது சன்னிஇ பிரியங்கா மாதேசியாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை போட்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து திருமண சடங்குகளை செய்தார். தொடர்ந்து காதலியின் பிணத்தின் அருகிலேயே அமர்ந்து கதறி அழுதார். இந்த காட்சிகள் மனதை உருக்குவதாக இருந்தது.