• Jan 09 2026

சீரற்ற காலநிலையால் தீவக படகு சேவைகள் பாதிப்பு!

Chithra / Jan 8th 2026, 9:50 am
image

 

நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.


இவ் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு பயணிகளைச் செயற்படுமாறு நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


இதேவேளை கடல் மற்றும் மீனவ சமூகத்தினர், இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை தீவின் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஒதுங்கிய கடல்பரப்புகளுக்கு செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதனால் பெரும்பாலும் தீவக படகு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீரற்ற காலநிலையால் தீவக படகு சேவைகள் பாதிப்பு  நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.இவ் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு பயணிகளைச் செயற்படுமாறு நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இதேவேளை கடல் மற்றும் மீனவ சமூகத்தினர், இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை தீவின் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஒதுங்கிய கடல்பரப்புகளுக்கு செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் பெரும்பாலும் தீவக படகு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement