• Jun 02 2025

சிரியாவின் ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு..!

shanuja / Jun 1st 2025, 12:51 pm
image

சிரியாவின் ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு..! 



சிரியாவின் லடாகியா பகுதியில் உள்ள ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்  நடத்திய  வான்வெளி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


சிரியாவின் லடாகியா மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த  ஏவுகணை கிடங்குகள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 



சர்வதேச நாடுகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஏவுகணைகள் இந்த கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன.



இந்தப் பகுதியில் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்யும்.


 

இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்பட கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபடும் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு. சிரியாவின் ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு. சிரியாவின் லடாகியா பகுதியில் உள்ள ஏவுகணை கிடங்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்  நடத்திய  வான்வெளி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவின் லடாகியா மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்த  ஏவுகணை கிடங்குகள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாடுகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய ஏவுகணைகள் இந்த கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நிலப்பரப்பில் இருந்து வான்வெளியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன.இந்தப் பகுதியில் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தன்னுடைய வேலையை செய்யும். இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஏற்பட கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் ஒழிப்பதற்கான பணியில் இஸ்ரேல் ஈடுபடும் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement