ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அலுவலகத்தில் விசேட விருந்து இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த விருந்து இடம்பெற்றுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பிறந்தநாள் விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கபிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.