புத்தளம் கற்பிட்டி, கருவலகுடா மற்றும் சின்ன அரிச்சாயி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்றுமுன்தினம்(03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி துரையடி மற்றும் சின்னக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் நேற்றுமுன்தினம்(03) கற்பிட்டி, கருவலகுடா மற்றும் சின்ன அரிச்சாயி ஆகிய கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு டிங்கி இயந்திர படகுகளை கடற்படையினர் சோதனையிட்டனர்.
இதன்போது, இதன்போது 14 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 426 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு. புத்தளம் கற்பிட்டி, கருவலகுடா மற்றும் சின்ன அரிச்சாயி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை பீடி இலைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்றுமுன்தினம்(03) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி துரையடி மற்றும் சின்னக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் நேற்றுமுன்தினம்(03) கற்பிட்டி, கருவலகுடா மற்றும் சின்ன அரிச்சாயி ஆகிய கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு டிங்கி இயந்திர படகுகளை கடற்படையினர் சோதனையிட்டனர்.இதன்போது, இதன்போது 14 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 426 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.