கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டும் காணமால் இருந்தால் அது வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையுமென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் என்.இன்பநாயகம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறுகிய நோக்களுக்காக குழுவாதங்களை விடுத்து மீனவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் என்.இன்பநாயகம் வேண்டுகோள் விடுத்தள்ளார்.
இந்திய இழுவைப்படகுகள் வடபகுதி கடற் பிரதேசத்திலே மீன்பிடிப்பதற்கான பாஸ் அனுமதி வழங்கவுள்ளதாக வெளியாக தகவலை தொடர்ந்தே என்.இன்பநாயகம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி செய்கின்றது என்பதற்காக, வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அழிவுபாதைக்கு இட்டுச்செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் என்.இன்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
வடபகுதிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் என்.இன்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இந்தியா உதவி செய்யட்டும் - அதற்காக வடபகுதி மக்கள் சாவதா – டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி SamugamMedia கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டும் காணமால் இருந்தால் அது வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையுமென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் தெரிவித்துள்ளார்.இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் என்.இன்பநாயகம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறுகிய நோக்களுக்காக குழுவாதங்களை விடுத்து மீனவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் என்.இன்பநாயகம் வேண்டுகோள் விடுத்தள்ளார்.இந்திய இழுவைப்படகுகள் வடபகுதி கடற் பிரதேசத்திலே மீன்பிடிப்பதற்கான பாஸ் அனுமதி வழங்கவுள்ளதாக வெளியாக தகவலை தொடர்ந்தே என்.இன்பநாயகம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.தற்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி செய்கின்றது என்பதற்காக, வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அழிவுபாதைக்கு இட்டுச்செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் என்.இன்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.வடபகுதிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் என்.இன்பநாயகம் குறிப்பிட்டுள்ளார்.