• Apr 01 2025

லொஹானுக்கும் மனைவிக்கும் பிணை - வெளிநாடு செல்ல தடை

Chithra / Dec 5th 2024, 2:18 pm
image

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ரஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இருவருக்கும் தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், லொஹான் ரத்வத்தவிற்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதி, லொஹான் ரத்வத்த, அந்தக் காரைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில், லொஹான் ரத்வத்தவின் மனைவியான ரஷி பிரபா ரத்வத்தவையும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

லொஹானுக்கும் மனைவிக்கும் பிணை - வெளிநாடு செல்ல தடை  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ரஷி பிரபா ரத்வத்த ஆகியோர் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.சந்தேகநபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இதன்படி இருவருக்கும் தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், லொஹான் ரத்வத்தவிற்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.ஒக்டோபர் 30 ஆம் திகதி, லொஹான் ரத்வத்த, அந்தக் காரைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இவ்வாறானதொரு பின்னணியில், லொஹான் ரத்வத்தவின் மனைவியான ரஷி பிரபா ரத்வத்தவையும் நவம்பர் 4ஆம் திகதி கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement