அக்கரைப்பற்றில் இன்று மாலை இடம்பெற்ற லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் இன்று(27) மாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.