• May 01 2024

போதைப்பொருளுடன் சிக்கிய காதல் ஜோடி...! வவுனியாவில் பொலிஸார் அதிரடி...! samugammedia

Sharmi / Jan 3rd 2024, 2:44 pm
image

Advertisement

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளது என்று சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கிருந்த காதல் ஜோடியிடம் கஞ்சாவும், தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெறவுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.நிரோசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருளுடன் சிக்கிய காதல் ஜோடி. வவுனியாவில் பொலிஸார் அதிரடி. samugammedia வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளது என்று சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கிருந்த காதல் ஜோடியிடம் கஞ்சாவும், தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.இதனையடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.நீதிமன்றத்தில் காதலர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெறவுள்ளனர்.இந்தக் கைது நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.நிரோசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement