ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மலரும் முல்லை பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி கடந்த 25.03.2026 அன்று நடைபெற்றது.
பாடசாலை பணிப்பாளர் REV.BRO.S.J அமிர்தறாஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி மணிசேகரம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் கூழாமுறிப்பு புனித யோசப் தேவாலய பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய கேன்ஸ்போவர், மதகுருக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், மழலைச் சிறுவர்களின் விழையாட்டு நிகழ்வுகள் மற்றும் இடைவேளை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலரும் முல்லை பாலர் பாடசாலையின் இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மலரும் முல்லை பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி கடந்த 25.03.2026 அன்று நடைபெற்றது.பாடசாலை பணிப்பாளர் REV.BRO.S.J அமிர்தறாஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி மணிசேகரம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.இந் நிகழ்வில் கூழாமுறிப்பு புனித யோசப் தேவாலய பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய கேன்ஸ்போவர், மதகுருக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், மழலைச் சிறுவர்களின் விழையாட்டு நிகழ்வுகள் மற்றும் இடைவேளை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.