காரைக்காலில் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற விக்னேஷ்(24) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் பாரதியார் சாலையில் உள்ள தனியார் ATM வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ATM இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கிய அந்த மர்ம நபர், வெகு நேரம் ஆகியும் முழுமையாக ATM இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியாமல் போனதால், ஆத்திரத்தில் அங்கிருந்த CCTV மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.
இதற்கிடையில் ATM உடைக்கப்படுவது தொடர்பாக இ-சர்வைலன்ஸ் சேவையின் மூலம் வங்கி மேலாளருக்கு எச்சரிக்கை தகவல் சென்றடையவே, வங்கி மேலாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், CCTV காட்சிகளை ஆராய்ந்து, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
காரைக்கால் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணையில் வங்கி ATMஐ அடித்து நொறுக்கி கொள்ளையடிக்க முயன்றது, நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், அவரது தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில், மது போதையில் ATMஐ கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
தங்கையின், திருமணத்திற்காக வங்கியின் ATMஐ உடைத்த இளைஞர் கைது காரைக்காலில் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற விக்னேஷ்(24) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் பாரதியார் சாலையில் உள்ள தனியார் ATM வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.ATM இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கிய அந்த மர்ம நபர், வெகு நேரம் ஆகியும் முழுமையாக ATM இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியாமல் போனதால், ஆத்திரத்தில் அங்கிருந்த CCTV மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.இதற்கிடையில் ATM உடைக்கப்படுவது தொடர்பாக இ-சர்வைலன்ஸ் சேவையின் மூலம் வங்கி மேலாளருக்கு எச்சரிக்கை தகவல் சென்றடையவே, வங்கி மேலாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், CCTV காட்சிகளை ஆராய்ந்து, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.காரைக்கால் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணையில் வங்கி ATMஐ அடித்து நொறுக்கி கொள்ளையடிக்க முயன்றது, நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், அவரது தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில், மது போதையில் ATMஐ கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.