• May 12 2024

3,500 ரூபாய்க்கு நடந்த கொலை - நண்பரை குத்தி கொன்ற சந்தேகநபர் கைது..! samugammedia

Chithra / Nov 30th 2023, 2:53 pm
image

Advertisement

 

சபுகஸ்கந்த சிறிமங்கல வீதி பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது நண்பரிடம் 3,500 ரூபாய் பெறச் சென்ற போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

3,500 ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்ள வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபரை கிரிபத்கொட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 41 வயதான ரொஷான் சமிந்த என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3,500 ரூபாய்க்கு நடந்த கொலை - நண்பரை குத்தி கொன்ற சந்தேகநபர் கைது. samugammedia  சபுகஸ்கந்த சிறிமங்கல வீதி பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.தனது நண்பரிடம் 3,500 ரூபாய் பெறச் சென்ற போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.3,500 ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்ள வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த நபரை கிரிபத்கொட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 41 வயதான ரொஷான் சமிந்த என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement