• May 13 2024

மன்னாரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது...!samugammedia

Anaath / Dec 19th 2023, 7:09 pm
image

Advertisement

மன்னாரில் ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் ட்னெட்னேட்டர் குச்சிகளுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இன்று செவ்வாய்கிழமை (19) காலை மன்னார் புதிய மூர்வீதி பகுதியில்  மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 525 ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் 354 டெட்னேட்டர்கள் குச்சிகள் உட்பட இனணப்பு நூல் 10 றோலும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேரத்தின் ஆலோசனையின் கீழ் ரத்ணமணல தலைமையினரான குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குருணாகல் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட நிலையிலேயே ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளையும் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன். விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் டெட்டினேட்டர் குச்சிகள் உட்பட கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மன்னாரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது.samugammedia மன்னாரில் ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் ட்னெட்னேட்டர் குச்சிகளுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை (19) காலை மன்னார் புதிய மூர்வீதி பகுதியில்  மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 525 ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் 354 டெட்னேட்டர்கள் குச்சிகள் உட்பட இனணப்பு நூல் 10 றோலும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேரத்தின் ஆலோசனையின் கீழ் ரத்ணமணல தலைமையினரான குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குருணாகல் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட நிலையிலேயே ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளையும் நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன். விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் டெட்டினேட்டர் குச்சிகள் உட்பட கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement