• May 17 2024

வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு..! யாழில் துயரம்

Chithra / Feb 11th 2024, 3:01 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் கச்சாய்- புலோலி வீதியில் மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை குறித்த விபத்து இடம்பெற்றது.

வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

காலையில் அதிக பனி மூட்டம் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியாததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு. யாழில் துயரம் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் கச்சாய்- புலோலி வீதியில் மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை குறித்த விபத்து இடம்பெற்றது.வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.காலையில் அதிக பனி மூட்டம் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியாததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement