வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் -
வேலணை, மண்டைதீவு புனிதபேதுரு வானவர் அந்தோனியாரின் தேவாலயத்தின் வருடாந்த
நவநாள் கூட்டுத்திருப்பலி இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இத்
தேவாலயத்தின் கொடியேற்றம் கடந்த 27.07.2023 அன்று ஆரம்பமாகி, இன்றையதினம்
நவநாள் நற்கருணை ஆராதனையுடான கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இக்
கூட்டுத்திருப்பலியினை ஒப்புக்கொடுப்பதற்காக பிரதம அதிதியாக யாழ்ப்பாண மறை
மாவட்ட பங்கு குருமுதல்வர் ஜெயபரட்ணம் அவர்கள் கலந்துகொண்டு
திருப்பலியினை ஒப்புக்கொடுத்தார்.
இதில்
வேலணை தீவகபகுதி வாழ் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு மண்டைதீவு
புனிதபேதுருவானவர் அந்தோனியாரின் ஆசிர்வாதத்தினை பெற்றுச்சென்றனர்.