• Dec 12 2025

கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த மன்னார் குடும்பஸ்தர் கைது

Chithra / Nov 13th 2025, 12:14 pm
image


சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை  விசாரித்தனர்.


அப்போது அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்ததையடுத்து, 

அவரை கைது செய்த மரைன் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார்  வங்காலை  பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய  சூசை தாசன் என்பது தெரியவந்தது.


இதையடுத்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன்  காரணம் குறித்து மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த மன்னார் குடும்பஸ்தர் கைது சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை  விசாரித்தனர்.அப்போது அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்த மரைன் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார்  வங்காலை  பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய  சூசை தாசன் என்பது தெரியவந்தது.இதையடுத்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன்  காரணம் குறித்து மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement