• Jun 22 2025

மன்னார் சுகாதாரப் பணிப்பாளரின் முறைகேடு - நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

shanuja / Jun 21st 2025, 10:22 pm
image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதனது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக  அரசாங்கம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.


வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர் த.வினோதனின் பழிவாங்கல், அதிகார துஸ்பிரயோகம், பக்கசார்பு, முறைகேடு என்பன தொடர்பாக சில விடயங்களை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகின்றோம்.  


அவர் 2019 ஆம் ஆண்டு முதல் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இடையில் சில மாதம் கிளிநொச்சியில பணியாற்றியவர். இடமாற்றம் செய்த பின்பும் பழிவாங்கும் செயற்பாடுகளை செய்தவர். மன்னார் வைத்தியசாலை தொடர்பாக முகநூலுலில் பல கருத்துக்களை போட்டு மீளவும் மன்னார் வந்தார். தனக்கு பிடிக்காத உத்தியேகத்தர்கள் மீது பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.


13 வருடங்களாக மனனாரில் பணியாற்றும் பிரியந்தன் என்பவருக்கு இடமாற்றம் வந்தும் அவருக்கு இடமாற்றம் கொடுக்காது அவரை வைத்து சில வேலைகளை செய்து வருகின்றார். இடமாற்றங்கள், இடமாற்ற மேன் முறையீடுகள், வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரால் வழங்கப்படும் இடமாற்றங்களை கூட சில உத்தியேகத்தர்களுக்கு வழங்காது தடுத்து வருகின்றார். சில விடயங்களில் அவர் பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றார். பலருக்கு சம்பளங்களை நிறுத்தி வைத்து பழிவாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.


அத்துடன் மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதன் அவர்களது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக 30 இற்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் கையொப்பம் வைத்தும் கடிதம்  வழங்கியுள்ளார். 


இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தீர்வு வரவில்லை. தீர்வு  வரும் வரை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு தெரிவித்துள்ளேன். 


இவ்வாறு வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்றார்.

மன்னார் சுகாதாரப் பணிப்பாளரின் முறைகேடு - நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதனது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக  அரசாங்கம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர் த.வினோதனின் பழிவாங்கல், அதிகார துஸ்பிரயோகம், பக்கசார்பு, முறைகேடு என்பன தொடர்பாக சில விடயங்களை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துகின்றோம்.  அவர் 2019 ஆம் ஆண்டு முதல் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இடையில் சில மாதம் கிளிநொச்சியில பணியாற்றியவர். இடமாற்றம் செய்த பின்பும் பழிவாங்கும் செயற்பாடுகளை செய்தவர். மன்னார் வைத்தியசாலை தொடர்பாக முகநூலுலில் பல கருத்துக்களை போட்டு மீளவும் மன்னார் வந்தார். தனக்கு பிடிக்காத உத்தியேகத்தர்கள் மீது பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்.13 வருடங்களாக மனனாரில் பணியாற்றும் பிரியந்தன் என்பவருக்கு இடமாற்றம் வந்தும் அவருக்கு இடமாற்றம் கொடுக்காது அவரை வைத்து சில வேலைகளை செய்து வருகின்றார். இடமாற்றங்கள், இடமாற்ற மேன் முறையீடுகள், வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரால் வழங்கப்படும் இடமாற்றங்களை கூட சில உத்தியேகத்தர்களுக்கு வழங்காது தடுத்து வருகின்றார். சில விடயங்களில் அவர் பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றார். பலருக்கு சம்பளங்களை நிறுத்தி வைத்து பழிவாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.அத்துடன் மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வினோதன் அவர்களது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக 30 இற்கும் மேற்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் கையொப்பம் வைத்தும் கடிதம்  வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தீர்வு வரவில்லை. தீர்வு  வரும் வரை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு தெரிவித்துள்ளேன். இவ்வாறு வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement