தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று மதியம் காலமானார்.
அந்தவகையில் 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் யாருமே எதிர்பாராத நேரத்தில் நேற்றைய தினம் அவர் உயிர் பிரிந்தது. இதனையடுத்து மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் நேரில் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மனோபாலவின் இறுதி நிகழ்வுகள் இன்று காலை அவரது இல்லத்தில் இடம்பெற்று மக்களின் கண்ணீர் மழையில் இறுதி ஊர்வலம் நடைபெற்று இறுதி ஊர்வலம் நடைபெற்று அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.