• Sep 20 2024

கதிர்காம பாதயாத்திரிகர்களின் நலன் கருதி நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் - நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிப்பு: டாக்டர் நபீல் தெரிவிப்பு!

Tamil nila / Jul 14th 2024, 10:51 pm
image

Advertisement

கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாமில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன்கருதி 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் தொனிப்பொருளில் உகந்தை மற்றும் குமண போன்ற இடங்களில் கடந்த (01) திங்கட்கிழமை முதல் (11) வியாழக்கிழமை வரை 11 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன. இம்மருத்துவ முகாமில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதுடன் தங்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்.

இதில் உடல் உபாதைகளை நீக்கக்கூடிய மருந்துகள் மற்றும் உடல் வலிகளைப் போக்கும் ஆயுர்வேத மருந்துகளும், பாம் போன்ற பல மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.எம்.அப்துல் சலாமின் உதவியுடன் சுமார் 6000 பாதயாத்திரிகர்களின் தாக சாந்திக்கான குளிர்பானமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஆயுர்வேத வைத்தியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு சிறந்த சேவையினை வழங்கியதுடன் கல்முனை மற்றும் அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் கலந்துகொண்டதாக பிரதி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர், சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உகந்தை காட்டுவழிப் பாதையூடாக இம்முறை 36ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காம பாதயாத்திரிகர்களின் நலன் கருதி நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் - நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிப்பு: டாக்டர் நபீல் தெரிவிப்பு கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாமில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கதிர்காம பாத யாத்திரிகர்களின் நலன்கருதி 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் தொனிப்பொருளில் உகந்தை மற்றும் குமண போன்ற இடங்களில் கடந்த (01) திங்கட்கிழமை முதல் (11) வியாழக்கிழமை வரை 11 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன. இம்மருத்துவ முகாமில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதுடன் தங்களுக்கு தேவையான ஆயுர்வேத மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்.இதில் உடல் உபாதைகளை நீக்கக்கூடிய மருந்துகள் மற்றும் உடல் வலிகளைப் போக்கும் ஆயுர்வேத மருந்துகளும், பாம் போன்ற பல மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.எம்.அப்துல் சலாமின் உதவியுடன் சுமார் 6000 பாதயாத்திரிகர்களின் தாக சாந்திக்கான குளிர்பானமும் வழங்கி வைக்கப்பட்டது.இதில் ஆயுர்வேத வைத்தியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு சிறந்த சேவையினை வழங்கியதுடன் கல்முனை மற்றும் அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் கலந்துகொண்டதாக பிரதி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர், சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.உகந்தை காட்டுவழிப் பாதையூடாக இம்முறை 36ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement