ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே நேற்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதில் இலங்கையில் சமாதானத்தைப் பேணுதல் , மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிதியளித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல், கல்வி, பொருளாதாரத்தை இயல்பு நிலைப்படுத்தல், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் நடைபெற்றதோடு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதில் UNICEF பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி Andreas Karpati, பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமர சூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே நேற்றைய தினம் (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.இதில் இலங்கையில் சமாதானத்தைப் பேணுதல் , மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், சுகாதாரம், நிர்வாகம் மற்றும் நிதியளித்தல், பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல், கல்வி, பொருளாதாரத்தை இயல்பு நிலைப்படுத்தல், காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடல் நடைபெற்றதோடு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இதில் UNICEF பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி Andreas Karpati, பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகிய அதிகாரிகள் பங்கேற்றனர்.