• Jun 19 2025

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் - சீன வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு!

shanuja / Jun 18th 2025, 12:38 pm
image

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு,   சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில்,மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்  உள்ளிட்ட குழுவொன்று சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


சந்திப்பில்  சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ கருத்துரைக்கையில்,  

மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை .


நாட்டை அபிவிருத்திச்  செய்யும் வேலைத்திட்டத்திற்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்திற்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது.- என்றார். 


அதன்பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா தெரிவிக்கையில், 


சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து  ஒருபடி உறுதிபெற்றுள்ளது. அதைப்போலவே, என்னை உள்ளிட்ட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானது.


அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். 


கட்சிப் பாடசாலைகளில் மற்றும்  பிரதேசற்களைக்  கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டுள்ள விதம் பற்றிய கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும்.- என்றார். 

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் - சீன வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு,   சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில்,மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்  உள்ளிட்ட குழுவொன்று சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.சந்திப்பில்  சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ கருத்துரைக்கையில்,  மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை .நாட்டை அபிவிருத்திச்  செய்யும் வேலைத்திட்டத்திற்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்திற்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது.- என்றார். அதன்பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா தெரிவிக்கையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து  ஒருபடி உறுதிபெற்றுள்ளது. அதைப்போலவே, என்னை உள்ளிட்ட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானது.அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். கட்சிப் பாடசாலைகளில் மற்றும்  பிரதேசற்களைக்  கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டுள்ள விதம் பற்றிய கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும்.- என்றார். 

Advertisement

Advertisement

Advertisement