மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளாராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில், இரு கட்சிகளுக்கிடையில் போட்டி நிலவிய நிலையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு செல்வது என சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 10 வாக்குகளை மேகசுந்தரம் வினோராஜ் பெற்றுக்கொண்டார். 09 வாக்குகளை சண்முகநாதன் கணேசநாதன் பெற்றுக்கொண்டதுடன், 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும்பான்மை வாக்கின் அடிப்படையில் தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார் .
எருவில்பற்று பிரதேசசபை தவிசாளாராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளாராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையில், இரு கட்சிகளுக்கிடையில் போட்டி நிலவிய நிலையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு செல்வது என சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 10 வாக்குகளை மேகசுந்தரம் வினோராஜ் பெற்றுக்கொண்டார். 09 வாக்குகளை சண்முகநாதன் கணேசநாதன் பெற்றுக்கொண்டதுடன், 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும்பான்மை வாக்கின் அடிப்படையில் தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார் .