• Feb 19 2025

காணாமல் போன முச்சக்கரவண்டி -பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Thansita / Feb 15th 2025, 9:41 pm
image

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட மாநகர தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 13.02.2025 அன்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சை நிறம் கொண்ட ABI-4194 இலக்கம் உடைய முச்சக்கரவண்டியே காணாமல் போய் உள்ளதாக 14.02.2025 அன்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் 0672229222 என்ற தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு  இவ்விடயம் தொடர்பில்  தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

காணாமல் போன முச்சக்கரவண்டி -பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட மாநகர தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 13.02.2025 அன்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சை நிறம் கொண்ட ABI-4194 இலக்கம் உடைய முச்சக்கரவண்டியே காணாமல் போய் உள்ளதாக 14.02.2025 அன்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இவ்விடயம் தொடர்பில் 0672229222 என்ற தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு  இவ்விடயம் தொடர்பில்  தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement