எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி இன்று வாழைச்சேனை பொலிஸாரினால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸாரால் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு என்பன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.