• Dec 02 2025

புயலை விட ஆபத்தானது – அதன் பின்னால் வரும் மயான அமைதி!

dileesiya / Dec 1st 2025, 10:33 am
image

இலங்கை  கடந்த சில நாட்களாக கடும் புயலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் காரணமாக முன் எப்போதும் காணாத சேதங்களை சந்தித்துள்ளது.


புயலின் தாக்கத்தை விட, புயலுக்கு பிறகு உருவாகும் மௌனமான காலமே நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.


இந்த புயல் மற்றும் வெள்ளத்தால், வீடுகள், சாலைகள்,ரயில் பாதைகள்,வாகனங்கள்,வியாபார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சொத்துகள் சேதமடைந்துள்ளன.


இலங்கையில் ஒரு சாதாரண குடும்பம் வீடு கட்டுவது அல்லது வாகனம் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் கனவு. அந்த கனவை நனவாக்க, பெரும்பாலானோர் பல வருட உழைப்பையும் சேமிப்பையும் பயன்படுத்துகின்றனர்.


அவ்வாறு  கட்டியெழுப்பிய சொத்துகள் ஒரே இரவில் நீரில் மூழ்கி அழிந்து போவது என்பது எந்த குடும்பத்திற்கும் சகிக்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.


புயல் தாண்டியும், வெள்ளம் குறைந்த பின்னரும் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது,சேதமடைந்த சாலைகளைச் சரிசெய்வது,வாழ்வாதாரத்தை மீண்டும் எழுப்புவது,

மனஅழுத்தத்திலிருந்து மீள்வது என்பன மிகப் பெரிய சவால்களாக இருக்கும்.


இந்த அமைதியான  காலம் தான்  நாட்டு மக்களுக்கும், அரசுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் உண்மையான போராட்டமாகும்.

புயலை விட ஆபத்தானது – அதன் பின்னால் வரும் மயான அமைதி இலங்கை  கடந்த சில நாட்களாக கடும் புயலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் காரணமாக முன் எப்போதும் காணாத சேதங்களை சந்தித்துள்ளது.புயலின் தாக்கத்தை விட, புயலுக்கு பிறகு உருவாகும் மௌனமான காலமே நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.இந்த புயல் மற்றும் வெள்ளத்தால், வீடுகள், சாலைகள்,ரயில் பாதைகள்,வாகனங்கள்,வியாபார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சொத்துகள் சேதமடைந்துள்ளன.இலங்கையில் ஒரு சாதாரண குடும்பம் வீடு கட்டுவது அல்லது வாகனம் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் கனவு. அந்த கனவை நனவாக்க, பெரும்பாலானோர் பல வருட உழைப்பையும் சேமிப்பையும் பயன்படுத்துகின்றனர்.அவ்வாறு  கட்டியெழுப்பிய சொத்துகள் ஒரே இரவில் நீரில் மூழ்கி அழிந்து போவது என்பது எந்த குடும்பத்திற்கும் சகிக்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.புயல் தாண்டியும், வெள்ளம் குறைந்த பின்னரும் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது,சேதமடைந்த சாலைகளைச் சரிசெய்வது,வாழ்வாதாரத்தை மீண்டும் எழுப்புவது,மனஅழுத்தத்திலிருந்து மீள்வது என்பன மிகப் பெரிய சவால்களாக இருக்கும்.இந்த அமைதியான  காலம் தான்  நாட்டு மக்களுக்கும், அரசுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் உண்மையான போராட்டமாகும்.

Advertisement

Advertisement

Advertisement