• Sep 21 2024

பிரித்தானியாவில் இடம்பெற்ற தீவிபத்து -தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு !

Tamil nila / Aug 22nd 2024, 9:49 pm
image

Advertisement

பிரித்தானியாவில் உள்ள பிராட்போர்டில் (Bradford)  அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற  தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

29 வயதான Bryony Gavit மற்றும் அவரது 09 வயது மகள் Denise Burtle, 05 வயது மகன் Oscar Burtle மற்றும் இளைய மகள் Aubree Burtle ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில்  39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

 இது குறித்து அயலவர்கள் தெரிவிக்கையில், அதிகாலை 1.45 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாரின் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த மூன்று குழந்தைகளில் இளையவரான ஆப்ரே, தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த சோகமான சம்பவத்தை சந்தித்ததாக  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இதே வேளை வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக பொலிஸாரின் துப்பறியும் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

மேலும்   இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், நண்பர்கள் மலர்களை வைத்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தீவிபத்து -தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு பிரித்தானியாவில் உள்ள பிராட்போர்டில் (Bradford)  அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற  தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.29 வயதான Bryony Gavit மற்றும் அவரது 09 வயது மகள் Denise Burtle, 05 வயது மகன் Oscar Burtle மற்றும் இளைய மகள் Aubree Burtle ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.இதன்போது சந்தேகத்தின் பேரில்  39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் இது குறித்து அயலவர்கள் தெரிவிக்கையில், அதிகாலை 1.45 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாரின் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று குழந்தைகளில் இளையவரான ஆப்ரே, தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த சோகமான சம்பவத்தை சந்தித்ததாக  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.குறித்த இதே வேளை வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக பொலிஸாரின் துப்பறியும் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும்   இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், நண்பர்கள் மலர்களை வைத்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement