• May 06 2024

வவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு...! அதிர்ச்சியில் மாணவர்கள்...!

Sharmi / Mar 12th 2024, 9:22 am
image

Advertisement

வவுனியா பாடசாலையொன்றில் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் நேற்றையதினம்(11) குப்பை குழியை துப்பரவு செய்த போது அங்கு வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டுகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மடுகந்தை பொலிஸார் தெரிவித்தனர். 


வவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு. அதிர்ச்சியில் மாணவர்கள். வவுனியா பாடசாலையொன்றில் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் நேற்றையதினம்(11) குப்பை குழியை துப்பரவு செய்த போது அங்கு வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டுகளை மீட்டனர்.இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மடுகந்தை பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement