நுவரெலியா மாவட்ட அக்கரபத்னை மன்றாசி நகரத்தில் இருந்து ஆட்லோ வழியாக அல்பியன் தோட்டத்தின் ஊடாக செல்லும் 4 கிலோமீட்டர் கொண்ட பிரதான வீதி தற்போது சேறும் சகதியுமாக காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக இந்த வீதியை பயன்படுத்தும் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதோடு வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
மழைக்காலம் என்பதால் பாதை வழுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த வீதியில் பாரிய அளவில் சகதியாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இந்த வீதியை செப்பனிட்டு தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் வீதிகள்: மக்கள் விசனம்- விடுக்கப்பட்ட கோரிக்கை. நுவரெலியா மாவட்ட அக்கரபத்னை மன்றாசி நகரத்தில் இருந்து ஆட்லோ வழியாக அல்பியன் தோட்டத்தின் ஊடாக செல்லும் 4 கிலோமீட்டர் கொண்ட பிரதான வீதி தற்போது சேறும் சகதியுமாக காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.அதன் காரணமாக இந்த வீதியை பயன்படுத்தும் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதோடு வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.மழைக்காலம் என்பதால் பாதை வழுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த வீதியில் பாரிய அளவில் சகதியாக உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இந்த வீதியை செப்பனிட்டு தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.