முள்ளிவாய்க்கால் அவலங்களை இளம் சந்ததிக்கு உணர்த்தும் விதமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தவகையில் இன்று மதியம் 1:30 மணிமுதல் யாழ் இந்துக் கல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.