• Sep 08 2024

புத்தளம் கலப்பு பகுதியில் கடலில் மிதந்த மர்ம பொதி...! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

Sharmi / May 31st 2024, 12:04 pm
image

Advertisement

புத்தளம் கலப்பு பகுதியில் கடலில் மிதந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று பொதிகளை சோதனைக்கு உற்படுத்திய போது குறித்த உறைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்போது 12 உறைகளில் சுமார் 320 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.



புத்தளம் கலப்பு பகுதியில் கடலில் மிதந்த மர்ம பொதி. பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி. புத்தளம் கலப்பு பகுதியில் கடலில் மிதந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.இதன்போது பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று பொதிகளை சோதனைக்கு உற்படுத்திய போது குறித்த உறைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.இதன்போது 12 உறைகளில் சுமார் 320 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement