வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பைரத திருவிழா இன்று(12) மாலை இடம்பெற்றது.
மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பைரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இன்றைய சப்பைரத திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் பங்கெடுத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.