பதுளை மாவட்டத்தில் 47 ஆயிரத்து 665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றில் இது தெரியவந்துள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 05 வயதுக்குட்பட்ட 10 ஆயிரத்து 873 சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அளுத் கிராமக் - அளுத் கடுக் தேசிய ஒருங்கிணைந்த பங்கேற்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜந்து வயதிற்கு உட்பட்ட சுமார் 10ஆயிரம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் - வெளியான அதிர்ச்சி தகவல் samugammedia பதுளை மாவட்டத்தில் 47 ஆயிரத்து 665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றில் இது தெரியவந்துள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 05 வயதுக்குட்பட்ட 10 ஆயிரத்து 873 சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தலைமையில் இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அளுத் கிராமக் - அளுத் கடுக் தேசிய ஒருங்கிணைந்த பங்கேற்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.