• Oct 19 2024

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐநா மனித உரிமை சாசனங்களிற்கு அமைய இயற்றப்படவில்லை - அம்பிகா! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 3:06 pm
image

Advertisement

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை பாராளுமன்றத்திற்கு தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும்  நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்றுதான் நாம் கூற வேண்டும். 

இந்த சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது. பல உரிமைகளைில் தாக்கத்ததை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும்போது மக்களின் அபிப்பிராயங்கள்,  சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுனர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும்.

ஆகவே இந்த சட்டத்திற்கு தற்போது எழுந்துகொண்டிருக்கின்றது. அரசாங்கமானது மக்கள், நிபுனர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறுப்படாமல்,  அலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் மத்தியில் கடமைகள் உள்ளன.

ஏனெனில் இலங்கை பல்வேறு ஐநா சாசனங்களில் கைச்சார்த்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கின்றது. இந்த சாசனங்களில் உள்ள உரிமைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமாகும்.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை. ஆகவே, அரசாங்கம் இதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவதென்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனைபேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களிற்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.


புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐநா மனித உரிமை சாசனங்களிற்கு அமைய இயற்றப்படவில்லை - அம்பிகா samugammedia பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை பாராளுமன்றத்திற்கு தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும்  நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்றுதான் நாம் கூற வேண்டும். இந்த சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது. பல உரிமைகளைில் தாக்கத்ததை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும்போது மக்களின் அபிப்பிராயங்கள்,  சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுனர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும்.ஆகவே இந்த சட்டத்திற்கு தற்போது எழுந்துகொண்டிருக்கின்றது. அரசாங்கமானது மக்கள், நிபுனர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறுப்படாமல்,  அலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் மத்தியில் கடமைகள் உள்ளன.ஏனெனில் இலங்கை பல்வேறு ஐநா சாசனங்களில் கைச்சார்த்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கின்றது. இந்த சாசனங்களில் உள்ள உரிமைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமாகும்.இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐநா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை. ஆகவே, அரசாங்கம் இதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவதென்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனைபேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களிற்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement