நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் தேவைப்பட்டால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை ராகுல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி,
21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற கல்விமுறையொன்றை உருவாக்கி இலங்கையின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பாரியளவிலான நிதியினை செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கல்வி நடவடிக்கைளை சீர்குலைத்தால் விரைவில் புதிய சட்டங்கள் - ரணில் அதிரடி அறிவிப்பு samugammedia நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் தேவைப்பட்டால் அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.மாத்தறை ராகுல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற கல்விமுறையொன்றை உருவாக்கி இலங்கையின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பாரியளவிலான நிதியினை செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.