• May 21 2024

இனி வரிசைகளில் காத்திருக்க தேவையில்லை - இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

Chithra / Dec 7th 2022, 11:23 am
image

Advertisement


வரிசைகளில் காத்திருக்காது ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டம் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய செயற்றிட்டத்தின் கீழ் 03 பிரதான வழிமுறைகளின் ஊடாக பொதுமக்கள் ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் W.A.B.S.E.குணசிங்க தெரிவித்தார்.


பயணச்சீட்டுகள் இணையத்தளம், தன்னியக்க இயந்திரம் மற்றும் முற்கொடுப்பனவு அட்டை ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த செயற்றிட்டத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இனி வரிசைகளில் காத்திருக்க தேவையில்லை - இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு வரிசைகளில் காத்திருக்காது ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த செயற்றிட்டம் சீன நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த புதிய செயற்றிட்டத்தின் கீழ் 03 பிரதான வழிமுறைகளின் ஊடாக பொதுமக்கள் ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் W.A.B.S.E.குணசிங்க தெரிவித்தார்.பயணச்சீட்டுகள் இணையத்தளம், தன்னியக்க இயந்திரம் மற்றும் முற்கொடுப்பனவு அட்டை ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.மேலும், இந்த செயற்றிட்டத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement