• May 20 2024

கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் பூரண ஆதரவு! samugammedia

Chithra / Apr 23rd 2023, 1:26 pm
image

Advertisement

ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களின் பூர்விகமான இன,மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் பூரண ஆதரவை வழங்குவதற்கு ஏக மனதாக தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் அன்றாடம் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டே வாழ்வாரத்தை கொண்டு சென்று கொண்டிருக்க கூடிய இக்கட்டான நேரத்திலும் கூட தமிழ் மக்களின் இருப்பை காப்பதற்கான இவ்வாறான போராட்டங்களுக்கு எமது வாழ்வாதாரத்தையும் தாண்டி ஒத்துழைப்பை கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். ஆகவே தான் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளிலும் உள்ள வியாபாரிகள் அன்றைய தினம் வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதான சந்தைகள் மற்றும் உள்ளூர் சந்தை வியாபாரிகள் அனைவரும் 25 ஆம் தேதி வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்க உள்ளோம் என வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றிய தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்துள்ளார்.


கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் பூரண ஆதரவு samugammedia ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்துள்ளார்.புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களின் பூர்விகமான இன,மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் பூரண ஆதரவை வழங்குவதற்கு ஏக மனதாக தீர்மானித்துள்ளோம்.குறிப்பாக வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் அன்றாடம் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டே வாழ்வாரத்தை கொண்டு சென்று கொண்டிருக்க கூடிய இக்கட்டான நேரத்திலும் கூட தமிழ் மக்களின் இருப்பை காப்பதற்கான இவ்வாறான போராட்டங்களுக்கு எமது வாழ்வாதாரத்தையும் தாண்டி ஒத்துழைப்பை கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். ஆகவே தான் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளிலும் உள்ள வியாபாரிகள் அன்றைய தினம் வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதான சந்தைகள் மற்றும் உள்ளூர் சந்தை வியாபாரிகள் அனைவரும் 25 ஆம் தேதி வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்க உள்ளோம் என வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றிய தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement