வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய 2025 குரோதி வருட மஹா சிவராத்திரிப் விஞ்ஞாபனம் 26.02.2025 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது
குரோதி வருடம் உத்தராயணபுண்ணியகாலம் மாசித்திங்கள் 14ம் நாள் (26/02/2025) புதன்கிழமை அன்று மஹா சிவராத்திரி பெருவிழா இடம் பெறும். அன்றைய தினம் அனைவரும் சிவ விரதம் அனுஷ்டித்து பகல் இரவு என இடம் பெறும் சிவபூஜை வழிபாடுகளில் கலந்து சிவனடி பணிந்து பேரருள் பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகின்றனர்
கிரியா காலங்கள் 26.02.2025
காலை 07.00 மணி அபிஷேகம் 8.00 மணி பூஜை, மதியம் 11.00 மணி அபிஷேகம் 12.00 மணி பூஜை, மாலை 04.00 மணி அபிஷேகம் 05.00 மணி பூஜை அபிஷேக பூஜை முதலாம் ஜாமம்
6.30-7.00, இரண்டாம் ஜாமம் 8.00 - 8.30, மூன்றாம் ஜாமம் 9.30 - 1.30 இரவு லிங்கோற்பவ தரிசனம் -12.15 நள்ளிரவு
நான்காம் ஜாமம் 4.00 அபிசேஷகம் 4.30 அதிகாலை பூஜை தொடர்ந்து உற்சவம் இடம் பெற்று எம்பெருமான் உள்வீதி, வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார்.
அத்தோடு மகா சிவராத்திரி தினத்தில்
மாலை 7.00 மணி முதல் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன இதனடிப்படையில்
1. மங்கள விளக்கேற்றல்
2. பிரதம குரு ஆசியுரை - ( சிவசிறீ ரஞ்சிய கீர்த்திவாச குருக்கள்)
3. புஸ்பாஞ்சலி (பரத நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவர்கள் வவுனியா)
4. வரவேற்பு நடனம் (மு/ஒட்டுசுட்டான் இ.த.க.பாடசாலை)
5. கனபதி கீர்த்தனை (ஆரணி நர்த்தன கலாலயா மாணவர்கள் மல்லாவி)
6. கீர்த்தனை (ஒட்டுசுட்டான் மலரும் முல்லை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
7. குழு நடனம் (மு/ஒட்டுசுட்டான் இ.த.க.பாடசாலை)
8. நடனம் (முன்பள்ளி மாணவர்கள் ஒட்டுசுட்டான்)
9. கண்ணன் நடனம் (ஆரணி நர்த்தன கலாலயா மாணவர்கள் மல்லாவி)
10. சிவதாண்டவம் (திருமதி.சாந்தா டாசன் ஆசிரியை நெறியாள்கை முள்ளியவளை)
R. சக்தி நடனம் (பரத நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவர்கள் வவுனியா)
12. சிவதாண்டவம் (ஒட்டுகட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
13. சொற்பொழிவு (சிவானந்தா மோகனராசா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் முல்லைத்தீவு)
14. நடனம் பிட்டுக்கு மண் சுமந்த (பரத நர்த்தனாலய நடன பள்ளி மாணவர்கள் வவுனியா)
15. ராதையின் தேடல் (ஆரணி நர்த்தன கலாலயா மாணவர்கள் மல்லாவி)
16. கண்ணன் நடனம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
17. சீதா ராம சரித்திரம் (பரத நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவர்கள் வவுனியா)
18. சக்தி நடனம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
19. சண்முக கீர்த்தனை (ஆரணி நர்த்தன கலாலயா மாணவர்கள் மல்லாவி)
20. ஒயிலாட்டம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்
21. தேவி புகழ் நடனம் (பரத நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவர்கள் வவுனியா)
22. மீனாச்சி நடனம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
23. சிவ நடனம் (மு/ஒட்டுசுட்டான் இ.த.க.பாடசாலை)
24. நாட்டிய நாடகம் (ஆரணி நர்த்தன கலாலயா மாணவர்கள் மல்லாவி)
25. வர்ணம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
26 . சிவநடனம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
27. என்னப்பன் அல்லவா நடனம் (பரத நர்த்தனாலய கடனப்பள்ளி மாணவர்கள் வவுனியா)
28. கணபதி நடனம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
29. வேப்பிலை நடனம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
30. காவடிச்சிந்து (ஆரணி நர்த்தன கலாலயா மாணவர்கள் மல்லாவி
31. சிவபார்வதி நடனம் பரத நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவர்கள் வவுனியா)
32. கரகம் (ஒட்டுசுட்டான் மலரும் முள்ளை கலாலயா நடனப்பள்ளி மாணவர்கள்)
33. பரிசளிப்பு
34. நன்றியுரை யுடன் கலை நிகழ்வுகள் நிறைவடையும்
அத்தோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்களால் இயன்ற பால்,இளநீர்,பழவகைகள்,பூக்கள்,பூமாலைகள்,வில்வ இலைகள் போன்றவற்றை ஆலயத்திற்கு கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். மேலும் 4ம் ஜய பூசை நிறைவு பெற்றதும் பாறணைப் பூஜை (அன்னதான வைபவம்) இடம்பெறும்