• Jun 05 2025

முல்லை உணவகங்களுக்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்; சிக்கலில் வர்த்தகர்கள்..!

Sharmi / Jun 3rd 2025, 11:12 am
image

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் நேற்றையதினம்  திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கையின்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் இருந்த உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. 

அத்தோடு கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதோடு, உணவு நிலையங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் எடுத்து கூறப்பட்டிருந்தது.

முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் தலைமையிலான குழுவினரால் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



முல்லை உணவகங்களுக்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்; சிக்கலில் வர்த்தகர்கள். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் நேற்றையதினம்  திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.குறித்த நடவடிக்கையின்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் இருந்த உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அத்தோடு கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதோடு, உணவு நிலையங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் எடுத்து கூறப்பட்டிருந்தது.முத்தையன்கட்டு பொதுச்சுகாதார பரிசோதகர் லோஜிதன் தலைமையிலான குழுவினரால் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement